அரிசி தட்டுப்பாடு - சிவப்பு அரிசியுடன் கலக்கப்படும் வெள்ளை அரிசி : மக்களின் கவனத்திற்கு!
#SriLanka
#rice
Thamilini
11 months ago
சிவப்பு அரிசிக்குப் பதிலாக வெள்ளை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சந்தையில் சிவப்பு பச்சை அரிசி பற்றாக்குறை காரணமாக சில தொழிலதிபர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு ஏராளமான புகார்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, இது தொடர்பாக சோதனைகளை நடத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர் திரு. அசேல பண்டார தெரிவித்தார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்