பிரித்தானியாவில் ஏலத்தில் விற்கப்படும் 700 ஆண்டு பழமையான கோட்டை

#England #Auction
Prasu
1 month ago
பிரித்தானியாவில் ஏலத்தில் விற்கப்படும் 700 ஆண்டு பழமையான கோட்டை

பிரித்தானியாவில், 700 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சிறப்பு கோட்டை முதல்முறையாக விற்பனைக்கு வந்துள்ளது.

Ripley Castle என அழைக்கப்படும் இந்த கோட்டை North Yorkshire அருகிலுள்ள Harrogate பகுதியில் அமைந்துள்ளது. இதன் விலை 21 மில்லியன் பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட 800 கோடி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கோட்டை லண்டனுக்கு வெளியே, பிரித்தானியாவில் விற்பனைக்கு வரும் மிக விலையுயர்ந்த சொத்தாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த கோட்டை 445 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. 

இதில், ஒரு பெரிய குளம், பப், ஹெலிபேடு, கார் பார்க்கிங், விவாக நிகழ்ச்சிகளுக்கான மண்டபம், கிரிக்கெட் மைதானம், ஹோட்டல், தேநீர் அறை மற்றும் பரிசுப் பொருள் கடை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 

14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டையை சர் தாமஸ் இங்கில்பி (Sir Thomas Ingilby) என்பவர் 50 ஆண்டுகளாக பராமரித்து வந்தார்.

1308-1309 காலகட்டத்தில், சர் தாமஸ் இங்கில்பியின் முன்னோர், எட்லின் த்வெஞ்சே (Edeline Thwenge) என்பவரை திருமணம் செய்து, இந்த கோட்டையை தகப்பனாரின் பரிசாகப் பெற்றார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!