மின்சார ஜெனரேட்டரில் இருந்து வந்த புகையை சுவாசித்த 04 பேர் மருத்துவமனையில் அனுமதி!
#SriLanka
Thamilini
11 months ago
பொகவந்தலாவ பகுதியில் மின்சார ஜெனரேட்டரில் இருந்து வந்த புகையை சுவாசித்ததால் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (09) காலை ஏற்பட்ட மின் தடை காரணமாக, பகவந்தலாவ பகுதியில் உள்ள ஒரு சில்லறை விற்பனைக் கடைக்குள் ஒரு ஜெனரேட்டர் இயக்கப்பட்டுள்ளது.
ஜெனரேட்டரிலிருந்து வந்த புகையை சுவாசித்ததால் கடையில் இருந்த நான்கு ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டு பொகவந்தலாவ பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளனர்.
அவர்கள் 25-35 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்