போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் உக்ரைன் : ட்ரம்ப் அறிவிப்பு!
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உக்ரைன் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைன் அதிபருடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் நாட்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சந்திப்பு சவுதி அரேபியாவில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்