நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து உயர் அதிகாரிகள் இணைந்து நடத்தும் சிறப்பு கலந்துரையாடல்!
#SriLanka
#GunShoot
#discussion
Thamilini
10 months ago
நாட்டில் பாதாள உலகக் கும்பல் மோதல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தற்போது சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்படுகிறது.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொண்டா மற்றும் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
அண்மைகாலமாக அதிகரித்துவரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக உயர் பாதுகாப்புமிக்க நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்