தேயிலை தொழிலை மேம்படுத்துவதற்காக பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

#SriLanka #Tea
Dhushanthini K
5 hours ago
தேயிலை  தொழிலை மேம்படுத்துவதற்காக பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

தேயிலைத் தொழிலை மேம்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டுக்கு அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

அதன்படி, சிறு தேயிலைத் தோட்டங்களுக்கான சாகுபடியை மீண்டும் தொடங்குவதற்காக முதல் கட்டமாக ரூ. 34.5 மில்லியனும், இரண்டாம் கட்டமாக ரூ. 17.5 மில்லியனும் மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு மறு சாகுபடிக்காக நிலுவைத் தொகை செலுத்துவதற்காக ரூ. 22.3 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை புதிய நிலங்களில் புதிய பயிர்களை பயிரிடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பயிர்களுக்கு ரூ.27.42 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740309657.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!