உள்ளூராட்சி தேர்தலை நடாத்த அழுத்தங்கள் பிரயோகிப்பு: சாணக்கியன்
#SriLanka
#sanakkiyan
Mayoorikka
10 months ago
உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதேவேளை தற்போதைய அரசாங்கமானது கடந்த கால அரசாங்கங்களின் கொள்கைகளையே தான் பின்பற்றி வருகின்றது.
அதில் எந்த சந்தேகமும் இல்லை.
அரசியலமைப்பு விடயத்திலே எதுவுமே இடம்பெறவில்லை.
அதேவேளை நீங்கள் சுயாதீன நிறுவனங்கள் மீது அழுத்தங்களை கொடுத்துள்ளீர்கள் எனவும் தெரிவித்தார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
