விவசாய நவீன மயமாக்கல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

#SriLanka
Mayoorikka
1 year ago
விவசாய நவீன மயமாக்கல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

உலக வங்கி மற்றும் ஜரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த விவசாய நவீன மயமாக்கல் திட்டம் நிறைவடைகின்ற நிலையில் குறித்த திட்டம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாய உற்பத்திகளை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செலயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

 விவசாய அமைச்சின் தொழில்நுட்பத்திற்கான பணிப்பாளர் அனுர விஜேயதுங்க தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் விவசாய அமைச்சின் அதிகாரிகள்,விவசாய நவீன மயமாக்கள் திட்ட பி.திப்பணிப்பாளர்,மாகாண பணிப்பாளர், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 எதிர் காலத்தில் விவசாய திணைக்கள பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கண்காணிப்பின் கீழ் விவசாய அமைச்சினால் குறித்த திட்டம் மேற்பார்வை செய்யப்படவுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740676758.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4