திறக்கப்படவுள்ள இரணைமடுக்குளதின் வான் கதவுகள்:கிளிநொச்சி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
#SriLanka
#Kilinochchi
Mayoorikka
2 months ago

தற்பொழுது பெய்து வரும் கடும் மலை காரணமாக இரணைமடு வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால், இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.
எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கில், இரணைமடு குளத்தின் வாயில்கள் திறக்கப்படவுள்ளது. .
இதனால், குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு
கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



