நாட்டை விட்டு தப்பியோடியபோது கோட்டாபய ராஜபக்ஷவை ரணில் பாதுகாத்தாரா? - ரணிலின் பதில்
#SriLanka
#Gotabaya Rajapaksa
#Ranil wickremesinghe
Dhushanthini K
2 months ago

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை மற்றும் அரசியல் குழப்பங்களால் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பியோடியபோது ரணில் விக்கிரமசிங்க அவரை பாதுகாத்தாரா என்ற கேள்விக்கு தற்போது பதிலளித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், கோட்டாபய ராஜபக்ஷவை ரணிலே பாதுகாத்தார் என்ற குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
அத்துடன் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனது அரசாங்கம் நம்பகதன்மை மிக்க விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



