கர்ப்ப கால உடல்நலக் கோளாறால் இங்கிலாந்தில் 26 வயது பெண் தற்கொலை

பிரித்தானியாவில் கர்ப்ப கால உடலநலக் கோளாறால் இளம் பென் ஒருவர் வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 வயதான ஜெஸ் க்ரான்ஷா என்ற இளம் பெண், அதிகப்படியான கர்ப்ப கால வாந்தி மற்றும் மயக்கம் (Hyperemesis Gravidarum - HG) நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான உதவிகள் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
HG என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு தீவிர நோய். இது அதிக வாந்தி, உடல் எடை குறைவு, நீர்ச் சுருக்கம் போன்ற உடல் சிக்கல்களை ஏற்படுத்தும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட முடியாமல், உடல் வலுவிழக்க நேரிடும். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுவர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



