தனிமையான பெண்களை கேலி செய்து மிரட்டிய யூட்டூபர் கிறிஸ்னாவை விசாரிக்கும் மனித உரிமை ஆணைக்குழு!

யாழ் பண்டத்தரிப்பில் வைத்து யூரியூப்பர் கிருஸ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.lanka4.com
உதவி வழங்குவது என்ற போர்வையில் சிறுமிகள் மற்றும் பெண்களை மிகக் கேவலமாக நடாத்திய குறித்த யூரியூப்பர் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்புக்களுடன் கூடிய பதிவுகள் வெளியாகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. lanka4.com
வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதாக கூறி குறித்த யூடியூபர் பல காணொளிகளை வெளியிட்டு வருகிறார்.lanka4.com
அதிகமாக புலம்பயந்தோரிடம் பணத்தைப்பெற்று இந்த செயற்பாட்டை செய்து வருவதாக காணொளிகளில் குறிப்பிட்டுள்ளார்.lanka4.com
அந்தவகையில்,குடும்பம் ஒன்றிற்கு உதவி செய்வதாக தெரிவித்து குறித்த யூடியூபர் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். இதன்போது அங்கிருந்த இளம் பெண் தன்னை காணொளி எடுக்க வேண்டாம் எனக் கூறிய போதிலும் வலுக்கட்டாயமாக அவரை காணொளி எடுக்க முயன்றுள்ளார்.lanka4.com
எனினும் அந்தப் பெண் அதற்கு மறுத்ததால் ய கடுமையாக வார்த்தைப் பிரயோகங்களால் குறித்த யூடியூபர் அந்த பெண்ணையும் அவரின் தாயையும் திட்டியுள்ளார்.lanka4.com
இதன்போது ’18 வயசு ஆகிட்டு இன்னும் பால் குடி மறக்கேலையோ ‘உங்கட மகளை கூப்பிடுங்கோ’ என்று சொன்னபடி குறித்த பெண்ணின் அறையின் வாசல் வரை சென்றதுடன் குறித்த பெண்ணை கேலி செய்தும் பேசியுள்ளார்.lanka4.com
இந்நிலையில் குறித்த காணொளி நேற்று சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் குறித்த நபர் மற்றும் குறித்த குடும்பம் தொடர்பிலான விபரங்களை வழங்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.lanka4.com
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




