இந்தியாவில் தானியங்கி ஜன்னலில் சிக்கி ஒன்றரை வயது சிறுவன் மரணம்
#India
#Death
#baby
#vehicle
Prasu
10 months ago
உத்தரபிரதேசத்தில் ஒன்றரை வயது சிறுவன் ஒருவன் புத்தம் புதிய காரின் தானியங்கி ஜன்னலில் கழுத்தில் சிக்கி உயிரிழந்ததாக அவனது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சக்கியா கிராமத்தில் வசிக்கும் ரோஷன் தாக்கூர், தனது குடும்பத்துடன் சந்தாடி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு புதிய பலேனோ காருக்கு பூஜை செய்யச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
சிறுவன் ரேயான்ஷ் ஜன்னலுக்கு வெளியே சாய்ந்து வெளியே ஒரு குரங்கைப் பார்த்துக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. கார் ஸ்டார்ட் ஆனபோது, தானியங்கி ஜன்னல் இயங்கி , அவனது கழுத்தில் சிக்கியது.
குழந்தை சுயநினைவை இழந்தது, குடும்பத்தினர் அவரை மௌவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
