அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் தொடங்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் முடிவுக்கு வருகிறது!

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் தொடங்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் இன்று (13) காலை 8.00 மணியுடன் முடிவுக்கு வர உள்ளது.
இருப்பினும், சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும், அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் தொடர்கிறது.
இது சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகும்.
இருப்பினும், இன்று காலை வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படுமா? இல்லையா? இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுர கிளையின் செயலாளர் டாக்டர் சசிக விஜேநாயக்க தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



