பெண்களுக்கு எதிரான வன்முறை! யாழில் வெடித்த போராட்டம்
#SriLanka
#Jaffna
#Protest
Mayoorikka
4 hours ago

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின், பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில் பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர மௌனத்தை கலைப்போம் எனும் தொனிப் பொருளில் மக்கள் கவனயீர்ப்பு செயல்வாதம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது தந்தை செல்வா கலையரங்கு வரை சென்று மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்தது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




