கிராண்ட்பாஸில் துப்பாக்கிச்சூடு - இரு இளைஞர்கள் படுகாயம்!
#SriLanka
#GunShoot
Dhushanthini K
1 month ago

கிராண்ட்பாஸின் நாகலகம் தெரு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்ய கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




