நாட்டின் ஒரு சில பகுதிகளில் நீர்வெட்டு!
#SriLanka
#water
Dhushanthini K
2 months ago
கட்டான வடக்கு பிராந்தியத்தின் பல பகுதிகளுக்கு இன்று 16 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இன்று (19) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பம்புகுளிய, முருதான, கட்டான வடக்கு, கட்டான மேற்கு, கட்டான கிழக்கு, உடங்காவ, மனச்சேரியா, தோப்புவ, களுவாரிப்புவ மேற்கு, இஹல கடவல, பஹல கடவல, வெலிஹேன வடக்கு, வெலிஹேன தெற்கு, அடிக்கண்டி, எட்கல, எட்கல தெற்கு, மஹா எட்கல மற்றும் களுவாரிப்புவ கிழக்கு ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை