மியன்மாரில் சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்!
#SriLanka
#Myanmar
Dhushanthini K
1 month ago

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 14 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவில் 4 இளம் பெண்களும் 10 இளைஞர்களும் அடங்குவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் மியான்மரில் உள்ள சைபர் முகாம்களில் இருந்து மீட்கப்பட்டு எல்லையைத் தாண்டி தாய்லாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்பு பாங்காக்கில் இருந்து இலங்கையின் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கான நிதி ஆதாரத்தை சர்வதேச இடப்பெயர்வு அமைப்பு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



