தேசிய பாதுகாப்பு விஷயங்களில் இனம், மதம் அல்லது பிராந்தியம் ஆகியவற்றை குழப்பிக் கொள்ளக் கூடாது - நலிந்த ஜயதிஸ்ஸ!!
#SriLanka
#Astrology
#world_news
#lanka4news
#Lanka4indianews
Thamilini
1 year ago
தேசிய பாதுகாப்பு விஷயங்களில் இனம், மதம் அல்லது பிராந்தியம் ஆகியவற்றை குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும், வன்முறை மற்றும் பயங்கரவாதம் எந்த வடிவத்திலும் வரலாம் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்க இன்று (2) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பிற்காக ஒருவரைக் கைது செய்யவோ அல்லது விசாரிக்கவோ முடியும் என்றாலும், ஒரு அரசாங்கம் என்ற வகையில் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
