யாழில் பசு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய நிகழ்வு!
#SriLanka
#Jaffna
#Lanka4
#Cow
Mayoorikka
4 hours ago

பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று யாழ். வடமராட்சியில் பதிவாகியுள்ளது.
வடமராட்சி - உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை நேற்று முன்தினம் ஈன்றுள்ளது.
ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவிப்பதென்பது அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகின்றது. இரண்டு நாம்பன், ஒரு பசுக் கன்று ஈன்றுள்ளது.
மூன்று கன்றுக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கன்றுகளை ஈன்ற பசுவையும் கன்றுகளையும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



