அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம்
#Death
#America
#people
#GunShoot
Prasu
1 year ago
அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஸ்பாட்சில்வேனியா கவுண்டி பகுதியில் உள்ள ஒரு கட்டிட வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 3 பேர் பலியானார்கள். மேலும் மூவர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
