உத்தரகாண்ட்டில் ஆற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் மரணம்
#India
#Death
#Accident
Prasu
11 months ago
உத்தரகாண்ட் மாநிலம், டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள தேவ்பிரயாகில் ஒரு கார் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாகனம் சாலையை விட்டு விலகி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததால், இந்த விபத்து ஏற்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். விபத்து நடந்தபோது காரில் ஆறு பேர் பயணம் செய்து கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு பெண் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.மீதமுள்ள ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
