நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழையுடன் கூடிய வானிலை!

#SriLanka #weather #Rain
Thamilini
1 year ago
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழையுடன் கூடிய வானிலை!
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்த பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாலை அல்லது இரவில் தீவின் ஏனைய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1746656421.jpg






இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4