பாகிஸ்தானுக்கு வெளியே உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்!

இந்திய ராணுவம் இன்று (10) காலை நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஒரு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள், இஸ்லாமாபாத்திற்கு வெளியே உள்ள மூன்று விமானப்படை தளங்கள் உட்பட பல பகுதிகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறின.
அதன்படி, இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் நகரிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீநகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உரியில் உள்ள லகமா கிராமத்தின் மீதும் பாகிஸ்தான் பீரங்கி குண்டுகளை வீசியது.
இந்தத் தாக்குதல் உள்ளூர்வாசி ஒருவரின் வீட்டை முற்றிலுமாக அழித்தது.
இதற்கிடையில், பாகிஸ்தான் இன்று அதிகாலை 3.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அனைத்து விமானங்களுக்கும் தனது வான்வெளியை மூடியுள்ளது.
நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்திற்கு அருகிலும், லாகூரில் பல இடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, நேற்று மாலை (09) வான்வெளி மூடப்பட்டது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



