கந்தானையில் காரில் பயணித்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு!

#SriLanka #GunShoot #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
கந்தானையில் காரில் பயணித்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு!

கந்தானையில் இன்று (03.07) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

 கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் காரில் பயணித்த இருவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம், காயமடைந்த இருவரும் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது. 

 மேலும், கந்தானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சமீர மானஹாரவும் ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1751148871.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4