கிளிநொச்சி யோக சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லத்தில் நடைபெறும் ஆடி அமாவாசை விரத நோன்பு
#SriLanka
#Kilinochchi
#function
#Religion
Prasu
1 year ago
ஆடி அமாவாசை 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது.
அன்று முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் தர்ப்பணம் மற்றும் பித்ரு பூஜைகள் செய்யப்படும். ஆடி அமாவாசை என்பது ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினமாகும்.
இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவதும், அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் மிக முக்கியமான சடங்காகும். இந்த நாளில் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, நீர் மற்றும் எள் கொண்டு செய்யப்படும் தர்ப்பணம் மற்றும் பித்ரு பூஜைகள் செய்யப்படுகின்றன.
இம்முறை எமது ஆலயத்தில் 24.07.2025 வியாழக்கிழமை காலை 08.30 மணி தொடக்கம் மதியம் 12.30 மணிவரை பிதிர் தர்ப்பணம் செய்துகொள்ள முடியும்.
அத்துடன் விசேட பூசையும் அதனைத்தொடர்ந்து விரதம் இருப்பவர்கள் மற்றும் அனைவருக்கும் அன்னதானமுமம் வழங்கப்படும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
