முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

#SriLanka #Court Order #Udaya Kammanpila #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
10 months ago
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (ICCPR) கீழ் குற்றப் புலனாய்வுத் துறை (CID) தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனுவை செப்டம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 மனுதாரர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் மனோகர டி சில்வாவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

 எனினும், உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்தது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4