கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை!

#SriLanka #Court Order #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
8 months ago
கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை!

நிதி மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 இந்த வழக்கு  இன்று (11)  கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

 இதன்போது நீதிபதி, பிரதிவாதியை  50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டார். 

 குற்றம் சாட்டப்பட்டவரின்  கைரேகைகளை எடுத்து அறிக்கை சமர்பிக்கவும்உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

 ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய ரமித் ரம்புக்வெல்ல, ஜனவரி 1, 2022 முதல் நவம்பர் 14, 2023 வரை ரூ.296 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்தியதற்கு கணக்கு காட்டத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4