இந்தியாவில் பெற்றோருக்கு இடையே நசுங்கி உயிரிழந்த 26 நாள் குழந்தை
#India
#Death
#baby
#Parents
Prasu
1 week ago
உத்தரபிரதேசத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோருக்கு இடையே தற்செயலாக நசுங்கி ஒரு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
25 வயது சதாம் அப்பாஸி மற்றும் அவரது மனைவி அஸ்மா ஆகியோருக்கு சுஃபியான் என்ற குழந்தை நவம்பர் 10ம் திகதி பிறந்தது.
குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, பெற்றோர் இரவில் தெரியாமல் உறங்கியதால் 26 நாள் குழந்தை அவர்களுக்கு இடையே சிக்கி உயிரிழந்துள்ளது.
அடுத்த நாள் காலை குழந்தை பதிலளிக்காமல் இருந்ததால் அருகில் உள்ள கஜ்ரௌலா சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )