கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு - தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
6 months ago
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு -  தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்!

கணேமுல்ல சஞ்சீவ’ கொலை தொடர்பாக 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் சந்தேக நபரான நந்த குமார் தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சார்ஜனும் சந்தேக நபரும் சைகைகளைப் பரிமாறிக் கொண்டதாகவும், சைகை மொழியைப் பயன்படுத்தி தொடர்பு கொண்டதாகவும் தெரியவந்ததை தொடர்ந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில், ஒரு பிஸ்கட்டை பாதியாக உடைத்து பகிர்ந்து கொண்டதும் அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. 

பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் சார்ஜென்ட் நவம்பர் 30 ஆம் தேதி இரவு 10:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை துணைப் பணியில் இருந்தார். சிசிடிவி காட்சிகளை நெருக்கமாக ஆராய்ந்ததில், அந்த அதிகாரி, சிறை எண் 03 இல் தடுத்து வைக்கப்பட்டிருந்த நந்த குமார் தக்ஷிக்கு ஒரு பிஸ்கட்டை வழங்கி, அதற்கு பதிலாக பாதி சாப்பிட்ட ஒரு துண்டைப் பெற்றதாகக் தெரியவந்தது. 

மேலும், அந்த அதிகாரி சந்தேக நபரின் சிறையை பலமுறை அணுகி, சைகை மொழியைப் பயன்படுத்தி அவருடன் தொடர்பு கொண்டதையும் காட்சிகள் காட்டுகின்றன. 

 சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு தற்போது முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4