நாட்டில் எரிவாயுவிற்கு பற்றாக்குறையா? அமைச்சர் விளக்கம்!
எரிவாயு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மறு த்துள்ளார்.
புதிய சப்ளையரான சுவிட்சர்லாந்தின் ஜியோகாஸ் டிரேடிங் எஸ்.ஏ.வின் கீழ் முதல் கப்பல் போக்குவரத்து ஜனவரி 5, 2026 ஆம் திகதிக்குள் இலங்கைக்கு வரவிருப்பதால், பற்றாக்குறை இருக்காது என்று இன்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இலங்கைக்கு எரிவாயு வழங்குவதற்கான டெண்டர் முந்தைய ஓமானி நிறுவனத்திற்குப் பதிலாக ஜியோகாஸ் டிரேடிங் எஸ்.ஏ.வுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், அதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
“முதல் எரிவாயு கப்பல் போக்குவரத்து ஜனவரி 5 ஆம் திகதிக்குள் இலங்கைக்கு வந்து சேரும். எனவே, சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுவது போல் எரிவாயு பற்றாக்குறை இருக்காது,” என்று அவர் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
