இன்றைய ராசிபலன் (21.12.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
11 hours ago
இன்றைய ராசிபலன் (21.12.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். பெரியோர் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். பரணி: திட்டமிட்டபடி உங்கள் வேலைகளை நடத்திக் கொள்ள முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தெய்வ வழிபாடு நன்மை தரும். கார்த்திகை 1: நீங்கள் மேற்கொள்ளும் செயல் லாபமாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலையில் கவனம் சிதறும். மனக்குழப்பம் அதிகரிக்கும். வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் நெருக்கடி உண்டாகும். வரவில் இழுபறி ஏற்படும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். மிருகசீரிடம் 1,2: பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. சட்டத்திற்கு புறம்பான செயல்களால் சங்கடம் தோன்றும். பணிபுரியும் இடத்தில் சிறு பிரச்னை உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். செல்வாக்கு உயரும். முயற்சி லாபம் தரும். எதிர்பார்த்த வரவு வரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் திட்டமிட்ட வேலை நடக்கும். திருவாதிரை: உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். நினைப்பதை நடத்தி முடிப்பீர். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்களை சரி செய்வீர். எதிர்பார்த்த வரவுவரும். உழைப்பாளர் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முயற்சி எதுவும் வேண்டாம்.

கடகம்

புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு விலகும். இழுபறி வேலை சாதகமாகும். பூசம்: மனக்குழப்பம் நீங்கும். தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும். ஆயில்யம்: திட்டமிட்ட வேலை நடக்கும். நேற்று இழுபறியாக இருந்த விவகாரம் இன்று முடிவிற்கு வரும்.

சிம்மம்

மகம்: விருப்பம் நிறைவேறும் நாள். எடுக்கும் வேலைகளில் லாபம் உண்டாகும். தடைபட்ட வேலை நடக்கும். பூரம்: பூர்வீக சொத்து குறித்த பிரச்னை முடிவு வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். உத்திரம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உறவினர் வீடு தேடி வருவர்.

கன்னி

உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அஸ்தம்: அலைச்சல் அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். சித்திரை 1,2: நேற்றைய விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

துலாம்

சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். எதிர்ப்பு விலகும். எடுத்த வேலை நடக்கும். சில வேலைகளைச் செய்து லாபம் காண்பீர். சுவாதி: நேற்று இழுபறியாக இருந்த பிரச்னைக்கு முடிவு கிடைக்கும். சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். விசாகம் 1,2,3: உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர். வேலைப்பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த வரவு வரும். நிதிநிலை உயரும். அனுஷம்: வெளியூர் பயணத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. கேட்டை: கொடுத்து வைத்த பணம் வரும். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். உறவினர்கள் வீடு தேடி வருவர். வார்த்தைகளில் கவனம் தேவை.

தனுசு

மூலம்: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். முயற்சி லாபமாகும். நினைத்தது நிறைவேறும். பணத்தேவை பூர்த்தியாகும். பூராடம்: மனக்குழப்பம் இருந்தாலும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. உத்திராடம் 1: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய தடை விலகும். செல்வாக்கு உயரும். எதிலும் நிதானம் அவசியம்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நெருக்கடியான நாள். செலவு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். திருவோணம்: பண விவகாரத்தில் கவனம் தேவை. முயற்சி இன்று இழுபறியாகும். செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக வீண் செலவு செய்வீர். அவிட்டம் 1,2: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் வேலைகளை நடத்தி முடிப்பீர். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

கும்பம்

அவிட்டம் 3,4: உற்சாகமான நாள். வருவாய் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும். குடும்ப நெருக்கடி நீங்கும். சதயம்: நினைத்ததை நடத்தி முடிப்பீர். நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பூரட்டாதி 1,2,3: எடுத்த வேலையில் வெற்றியுண்டாகும். வரவேண்டிய பணம் வரும். நிதிநிலை உயரும். அவசர கடன்களை அடைப்பீர்.

மீனம்

பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னை நீங்கும். தேவைக்கேற்ற பணம் வரும். உத்திரட்டாதி: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். முயற்சியில் எதிர்பார்த்த லாபம் வரும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர். ரேவதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!