டெல்லியில் வங்கதேச தூதரகம் முன் போராட்டம்
#India
#Protest
#Delhi
#Embassy
#Bangladesh
Prasu
1 hour ago
வங்கதேச தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டெல்லி, திரிபுரா மற்றும் மேற்கு வங்கதேசத்தில் உள்ள தூதரகங்களுக்கு வெளியே இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால், மூன்று தூதரகங்களிலும் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக வங்கதேசம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகத்துக்கு வெளியே பல்வேறு இந்து அமைப்பினர் ஒன்றிணைந்து இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, அப்பகுதியைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )