ராஜஸ்தானில் 15 கிராமங்களில் உள்ள பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

#India #Women #Mobile #Village #Banned
Prasu
6 months ago
ராஜஸ்தானில் 15 கிராமங்களில் உள்ள பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தின் கீழ் உள்ள 15 கிராமங்களில் மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் கேமராக்கள் பொருத்தப்பட்ட தொலைபேசிகளை பயன்படுத்த கிராம பஞ்சாயத்துகள் மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இந்த தடை ஜலோர் மாவட்டத்தின் காஜிபுரா, பாவ்லி, கல்ரா, மனோஜியா வாஸ், ராஜிகாவாஸ், டட்லாவாஸ், ராஜ்புரா, கோடி, சிட்ரோடி, அல்ரி, ரோப்சி, கானாதேவல், சாவிதர், பின்மாலின் ஹாத்மி கி தானி மற்றும் கான்பூர் உள்ளிட்ட கிராமங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு பதில் பெண்கள் பேசுவதற்கு விசைப்பலகை தொலைபேசிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி செல்லும் பெண்கள் தங்கள் படிப்புக்கு தொலைபேசி தேவைப்பட்டால் வீட்டில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4