அமெரிக்காவின் நடவடிக்கையை அங்கீகரிக்க முடியாது - வெனிசுலா விவகாரம் தொடர்பில் ராஜித சேனாரத்ன கருத்து!
வெனிசுலாவை ஆக்கிரமிப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கையை யாராலும் அங்கீகரிக்க முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது. இது தொடர்ந்தால், எந்த நாடும் விருப்பப்படி மற்றொரு நாடு மீது படையெடுக்கலாம்,” எனவும் கூறியுள்ளார்.
இருப்பினும், வெனிசுலாவின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தற்போதைய நெருக்கடிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், வெனிசுலா தீவிர சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தியிருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“மாறாக, கடுமையான சோசலிசத்தை விட சமூக ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும் சீனா போன்ற நாடுகள் எடுத்த பாதையை அது பின்பற்றியிருக்க வேண்டும் எனவும், நிலையற்ற தன்மை மற்றும் வெளிப்புற தலையீட்டைத் தவிர்க்க சமநிலையான பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”