டெல்லியில் குடும்பத்தினரை கொன்ற நபர் காவல் நிலையத்தில் சரண்
#India
#Police
#Murder
#Delhi
Prasu
2 months ago
டெல்லியில் நபர் ஒருவர் வீட்டில் தனது தாய், சகோதரி மற்றும் சகோதரனை கொலை செய்துவிட்டு பின்னர் காவல் நிலையத்திற்குள் சென்று சரணடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட யஷ்வீர் சிங் காவல் நிலையத்திற்குச் சென்று இந்த கொடூரமான குற்றம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் 12 வயது சகோதரர், 26 வயது சகோதரி மற்றும் 45 வயதுடைய அவரது தாய்க்கு போதைப் பொருளைக் கொடுத்து பிறகு மூவரையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு பின்னர் சரணடைந்துள்ளார்.
இந்த படுகொலைக்கு முக்கிய காரணம் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் தான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
(வீடியோ இங்கே )