வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பில் எச்சரிக்கை!
#SriLanka
#weather
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் வளர்ச்சியுடன், நாடு முழுவதும் - குறிப்பாக வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் - ஜனவரி 8 முதல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சுமார் 100 மி.மீ. வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”