சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய முயற்சி!‘
#SriLanka
#Police
#Investigation
#cyber crime
Thamilini
1 day ago
சைபர் குற்றங்களைத் தடுக்க ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) மேற்பார்வையின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”