கொத்மலையில் 2 மாதங்களுக்குப் பின் துரித கதியில் மறுசீரமைப்புப் பணிகள்!

#SriLanka #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 months ago
கொத்மலையில் 2 மாதங்களுக்குப் பின் துரித கதியில் மறுசீரமைப்புப் பணிகள்!

டித்வா சூறாவளியால் அதிகம் சேதமடைந்த கொத்மலை பனங்கம்மன பகுதியிலும், கொத்மலை மஹ பீல்ல எல பகுதியிலும் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை ஆரம்பமான இந்தப் பணிகள் நாளை திங்கட்கிழமை (19) வரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. கொத்மலை பனங்கம்மன பகுதியிலுள்ள சுமார் 20 பிரதேசங்களுக்கு செல்லும் வீதி முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியதால், அந்தக் பகுதிகளில் வசிப்பவர்கள் சுமார் 2 மாதங்களாக கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன் விளைவாக, அனுராதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குழு ஒன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் வீதியை புனரமைக்க முன்வந்துள்ளனர்.

கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த 2000 பேர் கொண்ட மற்றொரு குழுவினர் கொத்மலை மஹ பீல்லஎல பகுதியில் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

        

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4