தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த GMOA முடிவு!
#SriLanka
#strike
#doctor
#ADDA
Thamilini
1 hour ago
தொழிற்சங்க நடவடிக்கையைஎதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதி முதல் தீவிரப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் தீர்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் தீர்வை எட்டுவதற்கான சுகாதார அமைச்சருக்கு 48 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டது.
இருப்பினும், சுகாதார அமைச்சு உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், போராட்டத்தை மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அவசர செயற்குழு கூட்டம் இன்று (31) காலை நடைபெற்ற நிலையில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.