வளைகுடா போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானில் உள்ள தூதரகத்தை மூடிய சுவிட்சர்லாந்து
#Switzerland
#Attack
#War
#Embassy
#Iran
#closed
#Gulf
#L4
Prasu
2 hours ago
வளைகுடா போர் பதற்றம் காரணமாக ஈரானிலுள்ள தமது தூதரகத்தை தற்காலிகமாக மூடுவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
தூதரகம் மூடுவது தொடர்பில் சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் , சுவிட்சர்லாந்து தூதுவர் மற்றும் ஐந்து பணியாளர்கள் தரைவழியாக ஈரானை விட்டு வெளியேறியுள்ளதுடன், அவர்கள் தற்போது பாதுகாப்பாக நாட்டின் எல்லைக்கு வெளியே உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்புச் சூழல் வழமைக்குத் திரும்பியவுடன் அவர்கள் மீண்டும் தெஹ்ரானுக்குத் திரும்புவார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )