2024ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலில் 15 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த ரஷ்யா
2024 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலான 150 பேரைக் கொன்ற குரோகஸ் கச்சேரி அரங்கத் தாக்குதலில், நான்கு துப்பாக்கி ஏந்தியவர்கள் உட்பட 15 பேருக்கு ரஷ்யா ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ஷம்சிதீன் ஃபரிதுனி, டேலெர்ட்ஜோன் மிர்சோயேவ், மகம்மத்சோபிர் ஃபைசோவ் மற்றும் சைடக்ரமி ரச்சபோலிசோடா ஆகியோர் கட்டிடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி தீ வைத்த குற்றச்சாட்டுகளுக்கு தண்டனையை எதிர்கொள்கின்றனர்.
ஏனையோருக்கு கூட்டாளிகளாக செயல்பட்டதற்காகவும் பயங்கரவாத தொடர்புகளைக் கொண்டிருந்ததற்காகவும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர்.
சோவியத் கால ராக் இசைக்குழுவான பிக்னிக் இசை நிகழ்ச்சிக்கு சற்று முன்பு துப்பாக்கிதாரிகள் கச்சேரி மண்டபத்திற்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் கட்டிடத்திற்கு தீ வைத்தனர்,
இதனால் பலர் சிக்கினர். இந்த தாக்குதலில் 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர்.
(வீடியோ இங்கே )