சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்தது: இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தார் ரணில்.

#SriLanka #Treatment #Ranil wickremesinghe #Lanka4 #Singapore #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்தது: இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தார் ரணில்.

சிங்கப்பூரில் மருத்துவச் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) காலை நாடு திரும்பியுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாக அவர் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் சென்றிருந்தார். 

அங்குள்ள மவுண்ட் எலிசபெத் (Mount Elizabeth) மருத்துவமனையில் அவர் சத்திரசிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டார். சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அவர் மேலதிக உடல்நலக் கண்காணிப்புடன் நாடு திரும்பியுள்ளார்.

சத்திரசிகிச்சையின் பின்னரான தேறுதல் காலம் (Recuperation) என்பதால், அவர் இன்னும் சில வாரங்களுக்குப் பொது நிகழ்வுகளைத் தவிர்த்து முழுமையாக ஓய்வெடுக்குமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதற்கமைய, அவர் தனது இல்லத்தில் தங்கியிருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4