லெபனானுக்கு ஆதரவாக களமிறங்கிய ஈரான் அரசாங்கம்
#Attack
#Israel
#Lanka4
#Iran
#Agreement
#ceasefire
#Lebanon
Prasu
1 hour ago
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஈரானுடனான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்கு பிறகு, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள பரபரப்பான வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதில் 254 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் லெபனான் அறிவித்தது.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தாக்குதல்கள் தொடர்ந்தால் ஒப்பந்தத்திலிருந்து விலக வேண்டியிருக்கும் என்று அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையாக எச்சரித்துள்ளார்.
(வீடியோ இங்கே )