"அரசாங்கத்தைக் கவிழ்க்க யாரும் தேவையில்லை; அரசாங்கமே தன்னைத் தானே கவிழ்த்துக் கொள்ளும் - வஜிர சாடல்
#SriLanka
#government
#AnuraKumaraDissanayake
#NPP
Soruban
2 months ago
அரசாங்கத்தைக் கவிழ்க்க யாரும் முயற்சி செய்ய வேண்டியதில்லை அரசாங்கமே தன்னைத் தானே கவிழ்த்துக் கொள்ளும் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள 159 உறுப்பினர்களும் இந்த அழிவுப் பாதையைச் செவ்வனே செய்து வருவதால், ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வர வேண்டிய அவசியம் தற்போது இல்லை .
அரசாங்கம் முழுமையாக அழிந்த பின்னர், நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மட்டுமே வெளியில் உள்ள அரசியல் கட்சிகள் தேவைப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே