எரிசக்தி பதுக்கலை தவிர்க்குமாறு உலகளாவிய நிதி அமைப்புகள் கோரிக்கை!

#SriLanka #people #Country #Fuel #ImportantNews #Finance #power_generation
Lakhi
2 months ago
எரிசக்தி பதுக்கலை தவிர்க்குமாறு உலகளாவிய நிதி அமைப்புகள் கோரிக்கை!

உலக நாடுகள் எரிசக்தி விநியோகத்தை பதுக்குவதையும், ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதையும் தவிர்க்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி மற்றும் சர்வதேச எரிசக்தி முகவரகம் ஆகிய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அதிர்ச்சியை இத்தகைய நடவடிக்கைகள் மேலும் மோசமாக்கும் என இந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இது குறித்து சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் தலைவர் பாத்திஹ் பிரோல் (Fatih Birol) கூறுகையில், பல நாடுகள் எரிசக்தி இருப்புகளை தேக்கி வைப்பதையும், ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதையும் சுட்டிக்காட்டினார். அனைத்து நாடுகளும் எரிசக்தி இருப்புகளை தடையின்றி சந்தைக்கு வர அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) இது குறித்து கருத்து தெரிவிக்கையில், "முதலில் தீமை செய்வதை நிறுத்துங்கள்" என்று குறிப்பிட்டார்.

ஆசியா, துணை சஹாரா ஆபிரிக்கா மற்றும் சில தென் பசுபிக் தீவு நாடுகள் எரிசக்தி விநியோகம் குறித்து மிகுந்த கவலையில் இருப்பதாகவும், அந்த நாடுகளின் தலைவர்களைத் தான் சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் திடீர் கட்டுப்பாடுகள் உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4