ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெறவுள்ள அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

#America #Israel #War #Lanka4 #Iran #discussion #ceasefire
Prasu
3 hours ago
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெறவுள்ள அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 11ம் திகதி பாகிஸ்தானில் 21 மணி நேரம் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையே புதிய சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அல்லது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 2வது கட்ட பேச்சுவார்த்தை வருகிற 16ம் திகதி நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு இரு தரப்பினரும் ஒப்புகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2வது கட்ட பேச்சு வார்த்தையை இஸ்லாமாபாத்தில் நடத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவதற்கு அணுசக்தி விவகாரம்தான் முக்கியமானதாக இருந்தது. 

ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது குறித்து அமெரிக்காவும் ஈரானும் முன்மொழிவுகளைப் பரிமாறிக்கொண்டன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!