கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்த்தி நிலையத்தில் 9 சீனப் பிரஜைகள் கைது!

#SriLanka #China #Arrest #Airport #people #ImportantNews #Katunayaka #L4
Lakhi
2 months ago
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்த்தி நிலையத்தில் 9 சீனப் பிரஜைகள் கைது!

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும் 9 சீனப் பிரஜைகள், கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்த்தி நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களிடமிருந்து சுமார் 24 மில்லியன் ரூபாயிற்கும் அதிக மதிப்புள்ள மின்னணுத் தகவல் தொடர்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் இலங்கையில் தங்கியிருந்து இணையம் வாயிலாக நிதி மோசடிச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வானூர்தி நிலைய காவல்துறை பாதுகாப்புப் பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4