மட்டக்களப்பில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் உயிரிழப்பு!

#SriLanka #Batticaloa #Death #Attack #ImportantNews #Son #L4
Lakhi
2 months ago
மட்டக்களப்பில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் உயிரிழப்பு!

மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். சித்தாண்டி பகுதியை சேர்ந்த 40 வயதான தாய் ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாயுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் போது, மகன் கையால் தாய் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்திவெளி காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4