திங்கட்கிழமை முதல் பலத்த மழை மற்றும் இடிமின்னல் அபாயம்; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.

#SriLanka #Lanka4 #HeavyRain #Public #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
திங்கட்கிழமை முதல் பலத்த மழை மற்றும் இடிமின்னல் அபாயம்; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று(18) பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிவலக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகளில் வானிலை மோசமடையும் என எதிர்பார்க்கப்படுவதோடு, மாலையில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4